எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்தால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிய்யூ. டி. வீரசிங்க தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நபர்கள் முக்கியம் அல்ல, கட்சி எடுக்கும் முடிவே எமக்கு முக்கியம். எனக்கு தனிப்பட்ட நிலைப்பாடு இருந்தாலும் கட்சியின் முடிவுக்கே கட்டுப்படுவேன். நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவர். தூர நோக்கு சிந்தனை உள்ளது. சர்வதேசத்துடன் சிறந்த தொடர்பை பேணிவருகின்றார். எனவே, இளைஞர் ஒருவருக்கும் வாய்ப்பளிப்பது நல்லது.” – என்றார்.