நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!

மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உரித்தான ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் இன்று (8) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கான தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுமே தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

” நாளாந்தம் 18 கிலோ பச்சை கொழுந்து பறித்தால் மட்டுமே ஒரு நாளுக்கான வேதனம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் அரை நாளுக்கான சம்பளமே பதிவிடப்படுகின்றது. கொழுந்து இன்மையால் 12 கிலோ மாத்திரமே பறிக்ககூடியதாக இருக்கின்றது. அதற்காக காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது.

எனவே, எமக்கு தொழில் சலுகைகள் வழங்கப்படவேண்டும். உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அதனை வலியுறுத்தியே இந்நடவடிக்கையில் இறங்கினோம்.” – என்றார்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

Related Articles

Latest Articles