நோர்வூட்டில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மூவர் காயம்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் ஆட்டோவொன்று வீதியை வி்ட்டு விலகி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (13) மதியம் 12.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ, மோரா தோட்டபகுதியில் இருந்து, ஹட்டனுக்கு வந்துகொண்டிருந்த ஆட்டோவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆட்டோ சாரதி,அவரது உறவினர் மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் ஆட்டோவில் பயணித்துள்ளனர், ஆட்டோ சாரதிக்கு தலைப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு மூன்று பேரும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலா நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles