நோர்வூட் கீழ்பிரிவு தோட்ட ஶ்ரீ முத்துமாரியம் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 125 வருடகால பழமைவாய்ந்த மாரியம்மன் சிலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) அதிகாலைவேளையிலேயே இக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவருவதால் சாமி சிலைகள், ஆலயத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள அறையொன்றில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவ்வறை உடைக்கப்பட்டு மாரியம்மன் சிலை களவாடப்பட்டுள்ளது. காலையில் குருக்கள் பூஜைக்காக வருகைதந்திருந்தபோதே இது பற்றி தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள பொலிஸார், மோப்ப நாய்களின் உதவியுடன் கொள்கைக்கும்பலை தேடிவருகின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்