காலி, ஹிக்கடுவை, பத்தேகம நகரங்களில் உள்ள மக்கள் வங்கியின் பணம் மீளப்பெறல் கணனி இயந்திர கட்டமைப்பை உடைத்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையிட்ட வெளிநாட்டவர்கள் சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த பணம் மீளப்பெறல் இயந்திரங்களில் ஒன்றில் 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாவும் மற்றுமொரு இயந்திரத்தில் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவும் மேலும் ஒரு இயந்திரத்தில் 57 லட்சம் ரூபாவும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான முறைப்பாடுகள் காலி, ஹிக்கடுவை மற்றும் பத்தேகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த முறைப்பாடுகளின் ஊடாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










