பண்டாரவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை நகர் பகுதியில் நபரொருவர் ஹொரோயின் போதைப் பொருள் வைத்திருப்பதாக பண்டாரவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் இருந்து 470 மில்லிகிராம் ஹாரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை, பஹல கஹட்டவெல – எல்லே அளுத்கெதர பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்
