பாதீட்டை ஆதரித்திருந்தாலும் சஜித் கூட்டணியிலிருந்து வெளியேறமாட்டோம்!

வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி அங்கம் வகிக்கின்றது.

வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தின்போது அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. எனினும், சஜித் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவாக வாக்களித்தது.

இந்நிலையிலேயே, “அரசாங்கத்துடன் இணையும் எண்ணத்துடன் ஆதரவாக வாக்கவிக்கவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டதாலேயே ஆதரவளிக்கப்பட்டது.
zதன்மூலம் ஐக்கிய மக்கள் கூட்டணி மீதுஅதிருப்தி என்று அர்த்தம் ஆகாது. கூட்டணி உறவு தொடரும்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி. குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles