புதிய 19 வீடுகளுக்கான மின்னிணைப்பை வழங்கி வைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  பழனி திகாம்பரத்தின் முயற்சியினால் பொகவந்தலாவ பொகவான தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த வீடமைப்பு திட்டத்தில் இதுவரை மின்னிணைப்பைப் பெற்றுக் கொள்ளாத குடும்பங்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக மின்னிணைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுசரணையை மகிழ்ச்சி இல்லம் வழங்கி உள்ளது.

இந்த மின் இணைப்பு வழங்கும் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான
சோ. ஸ்ரீதரன், மகிழ்ச்சி இல்லத்தின் இயக்குநர் போதகர் பெ.ரவீந்திரன் இளைஞர் அணி தலைவர் பா.சிவனேசன் பிரதி பொது செயலாளர் கல்யானகுமார் அமைப்பாளர்களான லோகநாதன், சிவகுமார், தம்பிராஜ் சாள்ஸ் மற்றும் மாவட்ட தலைவர் தலைவி மற்றும் சங்கத்தின் முக்கியஸ்தர்களும் பிரதேச அமைப்பாளர்களும் தோட்ட தலைவர்களும் பயனாளர்களும் பங்கேற்றனர்.

Related Articles

Latest Articles