புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி போர்க்கொடி!

” உத்தேச புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலமானது ஜனாதிபதிக்கு கடுமையான – கொடுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தைவிடவும், புதிய சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை. எனவேதான் அதனை பயங்கரவாத தடைச்சட்டம் என சொல்வதைவிட, அரச பயங்கரவாத தடைச்சட்டம் எனக்கூறுவது பொருத்தமாக இருக்கின்றது.

ஜனாதிபதிக்கு கடுமையான – கொடுமையான அதிகாரத்தைக் கொடுக்கின்றது. தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளை தடைசெய்யலாம். அது உறுப்பினர்களுக்கு பாதகமாக அமையும். மக்களுக்கு பிரச்சாரம் செய்யவும், ஒன்றுகூட முடியாத சூழ்நிலையும் உருவாகும்.” – என்றார்.

 

Related Articles

Latest Articles