பெருந்தோட்ட மக்களுக்கு விசேட நிவாரணம் – வேலுகுமார் எம்.பி. வலியுறுத்து

” தோட்ட மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

” இன்று நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கின்றது. எரிபொருட்களின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.

எரிபொருட்களை பெறுவதற்கான போலீன்களும் பல கிலோமீட்டர் வரை நீண்டு செல்வதோடு எரிபொருட்களை பெற பல நாட்கள் தொடர்ந்து போலீன்களில் நிற்க வேண்டிய நிலைமை தோன்றியிருக்கிறது.

இந்நிலைமை நாட்டின் அனைத்து துறைகளின் செயற்பாட்டையும் ஸ்தம்பிதம் அடைய செய்திருக்கின்றது. குறிப்பாக பொருட்களின் தட்டுப்பாடு ஒருபக்கம் இருக்க கிடைக்கப்பெறும் பொருட்களின் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருக்கின்றது. வழமையான நாட்களிலேயே முறையான விநியோக வழிமுறையில்லாத தோட்ட பகுதிகள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றது. இச்சூழ்நிலையில் உடனடியாக தோட்ட மக்களுக்கு விசேட பொருள் விநியோக வழிமுறையும் நிவாரண திட்டமும் முன்வைக்கப்பட வேண்டும்.

தோட்டங்களின் வேலை நாட்களும் நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றது. தோட்டங்களில் இருந்து வெளி நகர் புறங்களில் வேலை செய்தவர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். போக்குவரத்து நெருக்கடியினால் வெளி இடங்களில் சென்று வேலைகளை செய்வதற்க்கும் முடியாது இருக்கின்றது. மறுபுறம் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. பொருள் தட்டுப்பாடு மிக மோசமான நிலையில் உள்ளது. இவ்வாறான சூழலில் தோட்ட மக்களை பாதுகாக்க விசேடமான நிவாரண திட்டமொன்று உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்களும் தோட்ட மக்களுக்கு ஒழுங்கான முறையில் கிடைக்கப்பெறவில்லை. பொதுவாகவே நிவாரணங்கள், உதவி திட்டங்கள் மேற்கொள்ளும் போது மலையக மக்களுக்கு பாராபட்சம் காட்டப்படுவது வழமை. அதுவே இந்திய நிவாரண பொருட்களிலும் நடைபெற்றிருக்கின்றது. தொடர்ந்து வரும் நாட்களில் நிலைமை மிக மோசமானதாக காணப்பட போகின்றது. அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி மலையக மக்களுக்கென தனியான நிவாரண திட்டமொன்றை முன்னெடுத்தல் வேண்டும்.

அவ்வாறு இல்லாத நிலையில் பாராபட்சத்திற்கு மத்தியில் மிக மோசமான பாதிப்பை மலையகத்தின் தோட்ட மக்கள் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். இன்றைய அரசாங்கத்திற்கு எமது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுத்தவர்கள் “அரசில் இருந்து வெளியேறிவிட்டோம்” என கூறி தம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. இன்றைய அனைத்து நிலைமைகளுக்கும் இவர்கள் பொறுப்பு கூற வேண்டும். ” – என்றும் வேலுகுமார் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles