‘மஹர சிறைச்சாலை கலவரம்’ – விசாரணைக்கு ஐவரடங்கிய குழு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் அலிசப்ரியால் இக்குழு இன்று நியமிக்கப்பட்டது என்று நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, பரிந்துரைகளுடனான அறிக்கையொன்றை ஒரு மாதத்துக்குள் இக்குழு முன்வைக்க வேண்டும்.

மேல் நீதிமன்றத்தின் ஓய்வூப் பெற்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான இக்குழுவில், நீதி அமைச்சின் பிரதம சட்ட ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹண ஹபுகஸ்வத்த, பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண ,  முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Articles

Latest Articles