முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குரிய இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க இந்த தகவலை வெளயிட்டுள்ளார்.
‘ முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்தால், அதனை நியாயப்படுத்தி இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள ரவீந்திர ஜயசிங்க, பொருளாதார காரணங்களில் அடிப்படையில் முப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இடித்துரைத்துள்ளார்.
