மாத்தளை மாவட்டத்தில் புதிதாக தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இப் பல்கலைக்கழக நிர்மாணிப்புக்காக மாத்தளை பிரதேசத்தில் 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான நாளக பண்டார கோட்கொட தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் 10 மாவட்டங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பபல்கலைக்கழகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
சிறு ஏற்றுமதி திணைக்களக் காரியாலயம் அமைந்துள்ள பண்டாரபொல பிரதேசத்தில் இதற்கான காணிஒதுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் காணப்படும் இயற்கை வளங்களை பயன்படுத்தி தொழில் நுட்பத்துறையில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களையும் நிபுணத்துவத்தையும் அளித்தல் போன்ற விடயங்கள் இப்பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.