மாத்தளை மாவட்டத்தில் மேலும் இரு பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகஹாகொடுவ கிராம சேவகர் பிரிவில் அகலவத்த கிராமமும், அரஸ்கம கிராமமுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.










