மே 31, ஜுன் 4 ஆம் திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாது!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை மே 31 மற்றும் ஜுன் 4 ஆம் திகதிகளில் தளர்த்தப்படமாட்டாது – என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அறிவித்தார்.

இதன்படி ஜுன் 7 ஆம் திகதி காலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இக்காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை, அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று விநியோகிப்பதற்கான நடமாடும் சேவை, பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பின்கீழ் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles