முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவுக்காக எதிரிணிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்காக சேவையாற்றியுள்ளார் எனவும், தற்போது அவருக்காக தான் முன்னிலையாவதாகவும் ஹிருணிகா குறிப்பிட்டார்.