உக்ரைனுக்கு எதிரான படைப் பலப் பியோகத்தை உடனடியாக நிறுத்திப் படைகளை அங்கிருந்து முற்றாக அகற்று மாறு ரஷ்யாவைக் கோருகின்ற பிரே ரணை ஐ. நா. பொதுச் சபையில் மிகப் பெரும் ஆதரவுடன் நிறைவேறியிருக்கிறது.
சபையின் 193 உறுப்பு நாடுகளில் 141 நாடுகள் பிரேரணையை ஆதரித்தும் ஐந்து நாடுகள் எதிர்த்தும் வாக்களித் திருக்கின்றன.சீனா, இந்தியா உட்பட குறைந்தது 35 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா, எரித்திரியா ஆகியன எதிர்த்து வாக்களித்தன.
மொஸ்கோ “உடனடியாக, முழுமையாக மற்றும் நிபந்தனையின்றி அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும்” என்று அத் தீர்மானம் கோருகிறது. தனது அணு ஆயுதப் படை களது ஆயத்த நிலையை அதிகரித்த மைக்காக ரஷ்யா மீது தீர்மானம் கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
ஐ. நா. பொதுச் சபையின் அவசரகாலக் கூட்டம் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்தது. நேற்று புதன்கிழமை வாக்கெடுப்பின் முடிவு அறிவிக்கப்பட்ட போது சபையில் பலத்த கரகோஷத்துடன் அது வரவேற்கப்பட்டது.பொதுச்சபை இவ்வாறு அவசரமான கூட்டம் ஒன்றை நடத்துவது 1997 ஆம் ஆண்டுக்குப் பின் னர் இதுவே முதல் முறையாகும்.
பொதுச் சபையின் இன்றைய தீர்மானம் போர் மேலும் தீவிரமாகுவதற்கே வழி வகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபைக் கான ரஷ்யத் தூதர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்
உக்ரைனில் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவந்து தனது படைகளை அங்கி ருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரும் பிரேரணை முதலில் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்டபோது மொஸ்கோ தனது வீற்றோ அதிகாரத்தி னால் அதனை நிறைவேற்றவிடாது தடுத் துவிட்டது. அந்த வாக்கெடுப்பிலும் சீனா வும் இந்தியாவும் கலந்துகொள்ளாது விலகியிருந்தன என்பது தெரிந்ததே.
பாதுகாப்புச் சபையில் பிரேரணை தோற் கடிக்கப்பட்டதை அடுத்தே பொதுச் சபை யின் அவசரகாலக் கூட்டத்தைக் கூட்டி அதிலே உறுப்பு நாடுகளது ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
குமாரதாஸன். பாரிஸ்.