தலவாக்கலை – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தைக்குட்டியொன்று இன்று (09/10/2020) மீட்கப்பட்டுள்ளளது.
குறித்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும்போதே தேயிலை மலையிலிருந்து குறித்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லிந்துலை பொலிஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சிறுத்தையின் சடலம் பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்