வெற்றியாம்! போராட்டத்தை நிறுத்தினார் விமல்!!

தன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் வெற்றிபெற்றதாகக் கூறி, போராட்டத்தை இன்று நிறைவுக்கு கொண்டுவந்தார் விமல் வீரவன்ச.

கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியை பிரதமர் துறக்க வேண்டும் என வலியுறுத்தியே கல்வி அமைச்சுக்கு முன்பாக விமல் நேற்று போராட்டத்தில் குதித்தார்.

தரம் 6 இற்குரிய கல்வி மறுசீரமைப்பு 2027 வரை ஒத்திவைக்கப்படும் என அரசாங்கம் இன்று அறிவித்த நிலையிலேயே, போராட்டத்தை விமல் முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

Related Articles

Latest Articles