” பரீட்சை நிலையங்களில் அனைத்து சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அச்சமின்றி ,அனுப்பிவையுங்கள்.” – என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மாலபே ராஹுல மகளிர் பாடசாலைக்கு இன்று (10) கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட கல்வி அமைச்சர், பரீட்சை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகமும் இதன்போது சென்றிருந்தார்.
மேற்பார்வை மேற்கொண்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. 2 ஆயிரத்து 936 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
