‘ அடிப்படை சம்பளம் 1000 ரூபா என்பதை அரசு சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்’

” நாட் கூலி தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பதை அரசாங்கத்தினால் வர்த்தமானியின் மூலம் உறுதிப்படுத்தப்படுத்துகின்ற போதே தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய் என்பது சாத்தியமாகும்.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் கருத்து தெரிவித்தப் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹற்றன் பணிமனையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் ப. கல்யாணகுமார், இளைஞரணி தலைவர் பா. சிவனேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சோ. ஸ்ரீதரன் தொடர்ந்து கருத்துக் கூறுகையில் ,

” இலங்கையில் தற்போது நாட் கூலித் தொழிலாளி ஒருவரின் அடிப்படை சம்பளம் 400 ரூபாயாக வரையறுக்கப்பட்டுள்ளது.இதனை அரசாங்கம் தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுள்ளது.இவ்வாறான சூழ்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வேதனம் தோட்டக் கம்பனிகள் வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சராகிய பிரதம மந்திரியால் முன்மொழியப்பட்டுள்ளது.

எனினும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வானதுபெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம் பெறுவதொன்றாகும்.

இந்தப் பேச்சு வார்த்தை இடம் பெறுவதற்கு முன்பு நாட்கூலி தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளம் 1000 ரூபாய் என்று அரசாங்கம் உரிய முறையில் அறிவிக்கும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை தொடர முடியும்.இந்த விடயம் தொடர்பில் தோட்டத் தொழிலாளர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

ஜனவரி முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு கிடைக்கப் போவதாக தற்போது பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை நாள் சம்பளமாக 700 ரூபாவைப் பெற்று வருகின்றனர்.

எந்த விதமான நிபந்தனை கொடுப்பனவுகளும் இன்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு 300 ரூபாய் கிடைக்கும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை விடத்து தோட்டத் தொழிலாளர்களைஏமாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது.இவ்விடயம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டி உறுப்பினர்கள் தமது சக தொழிலாளர்களிடத்தில் இவ்விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles