கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்ல பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த தாய், மகள் மற்றும் மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவிசாவளை பகுதியை சேர்ந்தவர்கள்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.