அத்தியாவசிய மருந்துகளை வாங்க வைத்தியர் ஷாபி நன்கொடை

நீதிமன்றத்தில் இணங்கியவாறு குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி அவருக்கு 26 இலட்சம் ரூபா நிலுவை சம்பளத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்தத் தொகையை நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடையாக வழங்குவதற்கு அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்களுக்கு கருத்தடை செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்து ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், அவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

எனினும் 2019 ஆம் ஆண்டில் குருநாகல் நீதிமன்றத்திற்கு அறிவித்த சீஐடியினர், அவர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இதேவேளை, அவருக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு இணக்கம் வெளியிட்டிருந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles