அநுரவுக்கு மஹிந்த அஞ்சவில்லை: அவரது அரசியல் பயணம் தொடரும்!

” இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தலைவர்,  அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நாளில் கொழும்பை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரின் அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது. அநுரவுக்கும் அஞ்சவில்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்சவின் வெளியேற்றம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

”  செப்டம்பர் 11 என்பது உலகில் பலம்பொருந்திய நாட்டுக்கும் பயங்கரவாதத்தின் அச்சம் தென்பட்ட நாளாகும். செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த நாளாகும்.

பயங்கரவாதிகளிடம் இருந்து  இலங்கையை பாதுகாத்த தலைவர் இப்படியானதொரு நாளில் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஓய்வுபெற்ற பின்னர் அவருக்கு இந்த வீட்டை (விஜேராம) வழங்குமாறு நான் யோசனை முன்வைக்கின்றேன்.

மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதில்லை. தங்காலையில் இருந்துதான் அவரது பயணம் ஆரம்பமானது. எனவே, அங்கிருந்து புதிய பயணம்கூட ஆரம்பமாகலாம்.

அநுரவின் அரசியல் அழுத்தங்களுக்கு நாம் அஞ்சவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அல்ல அதற்கு மேல் இருந்தாலும் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணியபோவதில்லை.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles