“ இலங்கையில் நீதித்துறை சுதந்திரத்தை இழந்துவிட்டது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி
வேண்டுமெனில் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதே ஒரே வழி.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ அன்று பிரதம நீதியரசர் ஷிராணியை வீட்டுக்கு அனுப்பினார் கள் ராஜபக்சக்கள். இன்று நீதிபதி சரவணராஜாவை நாட்டைவிட்டு வெளியுள்ளார்கள் ரணில் – ராஜபக்சக்கள். இப்படியான ஆட்சியாளர்கள் தேவையா என்பதைப் நாட்டு மக்கள்
தீர்மானிக்க வேண்டும். இந்த அரசு நீடித்தால் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை
எதிர்பார்க்கவே முடியாது.
எனவே, ஆட்சி மாற்றத்துக்கான பயணத்தில் சகல மக்களும் ஐக்கிய
மக்கள் சக்தியுடன் கைகோர்க்க வேண்டும்.” – என்றார்.










