அமெரிக்க குடியுரிமைக்காக முன்கூட்டியே குழந்தை பெற முயலும் இந்திய தம்பதிகள்!

எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை அறுவை ச சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ம் ஆண்டு முதல் அமுலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை இரத்து செய்யப்படும் என்று புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த 30 நாட்களில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை இரத்து செய்யப்பட உள்ளது. இதை எதிர்த்து 22 மாகாணங்கள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

சமூக நல அமைப்புகளும் ட்ரம்பின் இந்த முடிவுக்கு எதிராக வழக்குகளை தொடுத்துள்ளன.
அதிபர் ட்ரம்பின் முடிவு குறித்து இந்திய வம்சாவளியினர் கூறும்போது, “பிறப்பு குடியுரிமை சட்டத்தின் மூலம் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்திருக்கிறது. ஜனாதிபதி ட்ரம்பின் முடிவால் இந்தியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ” என்று தெரிவித்துள்னர்.

அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமை நடைமுறை இரத்து செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளை சேர்ந்த கர்ப்பிணிகள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இதனால் அமெரிக்கா முழுவதும் சிசேரியன் மூலமான குழந்தை பிறப்பு அதிகரித்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவால் அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமை நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி 19-ஆம் திகதி முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்று கொள்ள வெளிநாட்டு பெண்கள் விரும்புகின்றனர். குறிப்பாக இந்திய கர்ப்பிணிகள் உடனடியாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிசேரியன் தொடர்பாக எனக்கு மட்டும் ஒரு நாளில் 20 கோரிக்கைகள் வருகின்றன. அமெரிக்க சட்டவிதிகளின்படி சிசேரியன் மூலம் முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஆபத்து உள்ளது. குறிப்பாக வளர்ச்சி அடையாத நுரையீரல், நரம்ப மண்டல பாதிப்பு, எடை குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.” என்றும் இந்திய வம்சாவளி வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles