இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜு{லி சங், இன்று நாடு திரும்பும் நிலையில், அது தொடர்பில் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று ஊடக சந்திப்பை நடத்தி, பாற்சோறு சாப்பிட்டு தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நான்கு வருடகால சாபம் முடிவடைகின்றது எனவும், இது பாற்சோறு சமைத்து கொண்டாட வேண்டிய தருணம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஜுலி சங் 2022 பெப்ரவரி மாதம் முதல் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக செயல்பட்டார். சுமார் 4 வருடகால இராஜதந்திர சேவையின் பின்னர் இன்று அவர் நாடு திரும்புகின்றார்.
