அம்பலாங்கொடை நகர சபை வளாகத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள், விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளன.
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.
55 வயதான நிலந்த வருஷ விதான என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காரொன்றில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த காரை மற்றுமொரு பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கரந்தெனிய சுத்தா என்பவரின் மைத்துனர் என தெரியவருகின்றது. அவர் வர்த்தகர் எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை, உயிரிழந்தவர் நகரசபை உறுப்பினர் அல்லர் எனவும் தெரியவருகின்றது.










