” பொய்களால்தான் எமது அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. ஆனால ஆட்சிக்கு வருவதற்காக நாம் பொய்யுரைக்கப்போவதில்லை. கொள்கை அரசியலே எமது பயணம்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
தனக்கு அரசமாளிகையும் ஒன்றுதான், சிறைச்சாலையும் ஒன்றுதான். எனவே, சிறைக்கு செல்வதற்குகூட அஞ்சமாட்டேன் எனவும் அவர் கூறினார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் இவ்வாறு குறிப்பிட்டார்.










