அறுகம்பே குறித்த பயண ஆலோசனையை நீக்கியது அமெரிக்கா

அறுகம்பை பிரதேசம் தொடர்பில் அமெரிக்கா விடுத்திருந்த பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரையில் அறுகம்பை பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கடந்த 23ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் பாதுகாப்பு தொடர்பான அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த பாதுகாப்பு தொடர்பான ஆலோசனையை விலக்கிக்கொள்ளுமாறு வௌிவிவகார அமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Related Articles

Latest Articles