ஆசிய கிண்ணம் யாருக்கு? இந்தியா, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஆசிய கிண்ண டி20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் இன்று இரவு துபாய் சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று தனது பிரி​வில் முதலிடம் பிடித்​திருந்​தது. தொடர்ந்து சூப்​பர் 4 சுற்​றி​லும் 3 ஆட்​டங்​களில் வெற்​றியை பதிவு செய்​திருந்​தது.

அதே வேளை​யில் சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்​தான் அணி லீக் சுற்று மற்​றும் சூப்​பர் 4 சுற்​றில் தலா 2 வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​தது.

ஆசிய கோப்பை வரலாற்​றில் பாகிஸ்​தான் அணி முதன்​முறை​யாக தற்​போது​தான் இறு​திப் போட்​டி​யில் விளை​யாடு​கிறது. அந்த அணி லீக் சுற்​றில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், சூப்​பர் 4 சுற்​றில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் இந்​திய அணி​யிடம் தோல்வி அடைந்​திருந்​தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டம் (1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023) வென்றுள்ளது. இதில் 7 முறை 50 ஓவர் போட்டி வடிவிலும், ஒரு முறை டி 20 வடிவிலான தொடரிலும் (2016-ம் ஆண்டு) இந்தியா வாகை சூடி உள்ளது.

பாகிஸ்தான் அணி 2000 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது. இந்த இரு முறையும் 50 ஓவர் வடிவில் தொடர் நடத்தப்பட்டிருந்தது. டி 20 வடிவில் பாகிஸ்தான் அணி தற்போதுதான் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

Related Articles

Latest Articles