‘ஆபத்து இன்னும் குறையவே இல்லை’

நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட்-19 நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஆபத்து குறையவில்லையென இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

டெல்டா பிளஸ் பிறழ்வு நாட்டுக்குள் நுழையும் அபாயமுள்ளது.ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டபோதும், டெல்டா பிளஸ் பிறழ்வால் ஆபத்து மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையும் அத்தகைய ஆபத்திலேயே உள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles