அனர்த்த நிலைமையால் விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 1160 சிறு குளங்கள் சேதமடைந்துள்ளன.
இவற்றில் 125 சிறு குளங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
747 சிறு குளங்களுக்கு பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனுராதபுரம், வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள சிறு குளங்களே அதிகளவில் சேதமடைந்துள்ளன.
இந்த குளங்களுக்கு முன்னுரிமையளித்து அவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கான விரைவான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான நிதி ஒதுக்கீடும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் 15,958 குளங்கள் தற்போது பராமரிக்கப்படுகின்றன.










