“ஆளும், எதிரணி எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமம்” – செயலாளர் பரபரப்பு தகவல்

” 42 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அரசியலமைப்பையே மாற்றியமைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சி வசம் தற்போதுள்ள ஒரு ஆசனத்தை 60 ஆக்குவதென்பது ‘சிம்பிளான’ விடயமாகும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்கவை பெயரிடுமாறுகோரும் ஆவணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்று தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்தார்.

இதன்படி இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் நாளை 18 ஆம் திகதி வெளியிடும் எனவும், 22 அல்லது 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் பதவியேற்பார் எனவும் தெரியவருகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவிடம் ஆவணத்தை கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரங்கே பண்டார கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக்கட்சி பெற்ற வாக்குகளுக்காகவே ஓர் தேசியப்பட்டில் கிடைத்தது. அது இலவசமாகக் கிடைக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம். நாட்டுக்காகவும், மக்களுக்காகவுமே அவரை அனுப்புகின்றோம்.

கைவசம் ஒன்றுதான் உள்ளது. அதன் பிரதிபலன் 60 ஆக மாறும். இதன்மூலம் நான்கூறவரும் விடயம் மக்களுக்கு புரியும். அரச மற்றும் எதிரணி உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் பேச்சு நடத்திவருகின்றனர். அதன் பலனையும் எதிர்காலத்தில் அறியக்கூடியதாக இருக்கும்.

42 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அரசையே முன்னெடுக்க முடிந்ததென்றால், அரசியலமைப்பில்கூட திருத்தத்தை மேற்கொள்ள முடியுமென்றால், வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியுமென்றால் ஒன்றை 60 தாக்குவதென்பது ரணிலுக்கு சிம்பிளான விடயம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles