இங்கிலாந்து அணி அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடரில சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- இங்கிலாந்து அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைக் குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக சார்லஸ் 38 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனையடுத்து 181 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரரான பட்லர் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில், அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி 13 ஓட்டங்களுடன் அவுட்டானார்.

இதனையடுத்து கை கோர்த்த பிலிப் சால்ட் – பேர்ஸ்டோவ் இணை வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இதனால் இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறிய இங்கிலாந்து வெறும் 17.3 ஓவர்களிலேயே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 87 ரன்களும், பேர்ஸ்டோவ் 48 ரன்களும் அடித்து அசத்தினர்.

Related Articles

Latest Articles