இந்தியாவில் நிலநடுக்கம்: (காணொளி)

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நில நடுக்கம் இன்று(03) பிற்பகல் 2.25 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டதாகவும் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் 4.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளில் உள்ள பொருட்கள் நில அதிர்வால் அசைந்த காட்சிகளும் சமூக வலைததளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles