” இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தால் எதிர்காலத்தில் பாரதூரமான பிரச்சினை ஏற்படக்கூடும்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
” இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் அண்மையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எதிர்காலத்தில் இது பாரதூரமான பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.
ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில், புலிகள் செயற்பட்டபோது இந்தியா எமக்கு பருப்பு போட்டது. இவ்வாறு ஜே.ஆர். அரசை அச்சுறுத்தி இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இவ்வொந்தத்தின் பின்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் கடந்த 11 வருடங்களாக மாகாணசபைகள் இயங்கவில்லை. அதிகாரிகளுக்கு வேலை இல்லை. அவர்கள் சும்மா இருக்கின்றனர்.
கோடி கணக்கான பணம் வீண் விரயமாகின்றது.
எமது நாட்டில் அல்லாமல் அழுத்தத்தின் பிரகாரம் இம்முறையை உருவானதால்தான் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.” – எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
……….










