மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
சவூதி அரசின் சைபர் கிரைம் சட்டத்தின் படி, இந்த குற்றத்துக்கு 1 இலட்சம் சவூதி ரியால் அபராத தொகையுடன் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் இத்தகைய ஆட்சேபனைக்குறிய குறியீடுகள் அனுப்பப்படுவதாக அதிகாரிகளுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டு அது நிரூபிக்கப்பட்டால் , அந்த முறைப்பாடு பாலியல் துன்புறுத்தலாக கருதப்பட்டு சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.