நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் அனுராதபுரம் – அவ்வப்போது மழை பெய்யும் மட்டக்களப்பு – சிறிதளவில் மழை பெய்யும் கொழும்பு – சிறிதளவில் மழை பெய்யும் காலி – சிறிதளவில் மழை பெய்யும் யாழ்ப்பாணம் – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் கண்டி – பிரதானமாக சீரான வானிலை நுவரெலியா – பிரதானமாக சீரான வானிலை இரத்தினபுரி – பிரதானமாக சீரான வானிலை திருகோணமலை – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மன்னார் – அவ்வப்போது மழை பெய்யும்
