பின்னவல யானைகள் சரணாலயத்திலுள்ள ‘சுரங்கி’ என்றழைக்கப்படும் யானையொன்று இன்று இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.
முதலாவது குட்டியை இன்று அதிகாலை 4 மணிக்கு ஈன்றெடுத்ததுடன், இரண்டாவது குட்டியை மதியம் 12 மணிக்கு ஈன்றெடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
பிறந்த இரண்டு குட்டிகளும் ஆண் குட்டிகள் என அறிய முடிகின்றது.
இதற்கு முன்னர் 1941 ஆம் ஆண்டளவிலேயே இலங்கையில் இவ்வாறானதொரு சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.