இரட்டை பிரஜாவுரிமை பெற்றிருந்தால், உடனடியாக சபையில் இருந்து விலக வேண்டும்- தேர்தல்கள் ஆணைக்குழு

நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர, வேறு எந்த முறையிலும் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள்.

எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் இரட்டைக் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரா என்பதை ஒரே நேரத்தில் அறிவிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை பெற்றிருந்தால், அவர் உடனடியாக சபையில் இருந்து விலக வேண்டும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

தேர்தலின் போது வேட்புமனுக்களை ஏற்கும் போது இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இது தொடர்பாக ஒரு தரப்பு அறிக்கை அளித்தால் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 இரட்டைக் பிரஜாவுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பின் சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் அவர்கள் உடனடியாக தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles