இரத்தினபுரியில் விபத்து – ஐவர் படுகாயம்!

இரத்தினபுரி, நவநகர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிவேகமாக வந்த காரொன்று, மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குருவிட்ட பிரதேசத்தில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த, மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
வுpபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles