இரு வழி பயணம் குறித்த தகவலை வெளியிட்டார் மைத்திரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். இதற்கான பணியை மேற்கொள்வதற்காக நான் மாவட்டந்தோறும் பயணம் மேற்கொள்ளவுள்ளேன் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 1951 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து தலைமைப்பதவியை வகித்தவர்கள் கட்சியைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அமைச்சர்கள், கட்சி அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

அந்தவகையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தேசிய மட்டத்தில் பலப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் அவசியம். அதனை நாம் செயற்படுத்தியுள்ளோம். இவ்வாரம் முதல் மாவட்டந்தோறும் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். எமது கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் செல்வார்கள். கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அவர்கள் முன்னெடுப்பார்கள்.

இன்னும் தேர்தலொன்று அறிவிக்கப்படவில்லை. எனவே, அது பற்றி குறிப்பிடமுடியாது. புதிய அரசு ஆட்சிக்குவந்து இரு ஆண்டுகள்கூட செல்லவில்லை. எனவே, அரசுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையும் இடம்பெறும்.

இந்நாட்டில் தேசிய ஒருமைப்பாடு அவசியம். அப்போதுதான் நாட்டை கட்டியெழுப்ப முடியும். ஏனெனில் ஒரு அரசு முன்னெடுத்த திட்டங்களை, ஆட்சிமாற்றத்தின் பின்னர் மற்றைய அரசு நிறுத்திவிடுகின்றது. அமைச்சர்களும் அவ்வாறுதான் செய்கின்றனர். எனவே, தேசிய விடயங்களின்போது ஐக்கியம் அவசியம். இல்லையேல் திட்டங்கள் வெற்றியளிக்காது.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles