இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பின், இலங்கைக்கான பிரதிநிதி உறுதியளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், உலக சுகாதார அமைப்பின்
இலங்கைக்கான பிரதிநிதி Dr. அலகா சிங்குக்கும் இடையிலான சந்திப்பு, பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அரசால்நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க இலங்கையால் முடியும் என்று தான் நம்புவதாக சிங் இதன்போது கூறியுள்ளார்.
இலங்கையின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய ஆதரவையும் இந்தியா, பங்களாதேஷ் உட்பட பல நாடுகளின் ஆதரவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராட்டினார்.