இலங்கையில் இன்று 9 ஆயிரத்து 983 கொரோனா வைரஸ் ஒழிப்பு முன்கள பணியாளர்களுக்குகொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி கடந்த 29 ஆம் கொழும்பில் ஆரம்பமானது. முதல் நாளில் 5 ஆயிரத்து 286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கே இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று 9 ஆயிரத்து 983 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதன்படி 8 நாட்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 310 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

