இரத்தினபுரி, கஹவத்த – கொட்டகெதன பகுதியில் தாய் மற்றும் மகளை படுகொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவை (19) பிறப்பித்துள்ளார்.
கொட்டகெதன பிரதேசத்தைச் சேர்ந்த நீல் லக்ஷ்மன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு தாய் மற்றும் மகள் இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எப்.எம். அலி










