பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீனப் பிரதமர் லி கியாங்குடன் பீஜிங்கில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தொடர்பான உலகத் தலைவர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாசாரம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ கடன் வழங்குநர்களுடனான சிறிலங்காவின் அண்மைய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், அவர் சீனப் பிரதமரிடம் விளக்கிக் கூறியுள்ளார்.
ஒரு முக்கிய வளர்ச்சி பங்காளியாக சீனாவின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சிறிலங்கா பிரதமர், பாதை மற்றும் அணை முன்முயற்சியின் (BRI) கீழ் நடந்து வரும் மற்றும் முன்மொழியப்பட்ட திட்டங்கள் தொடர்பான சிறிலங்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.