கொழும்பு – மட்டக்குளி, மத்திய வீதி பகுதியில் பட்டப்பகலில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் காரொன்றிலிருந்து இறங்கிய சந்தர்ப்பத்தில் பின்னால் மற்றுமொரு காரில் வந்த இரு நபர்கள், அவர்மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் கடுமையான காயங்களுக்குள்ளான குறித்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.










