இஸ்ரேல்மீது தாக்குதல் தொடுத்தது ஈரான்: அமெரிக்காவும் களத்தில்!

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் மீது ஈரான் வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது

சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் இரண்டு இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், கோபமடைந்த ஈரான் இந்த தாக்குதலை நடத்திய இஸ்ரேல் மீது தற்போது வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாக தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கியுள்ளதால் அப்பகுதியில் பெரும் போர் பதற்றத்தை நிலவிவருகிறது. இந்நிலையில், ஈரானிய ட்ரோன்களை அமெரிக்கா இராணுவம் சுட்டு வீழ்த்தி வருகிறது. மேலும், சிரியாவிலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமெரிக்காவில் தனது கடற்கரை இல்லத்திற்கு மேற்கொண்டிருந்த பயணத்தை இத்தாக்குதல் காரணமாக இரத்து செய்துவிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவசரமாக வெள்ளை மாளிகை திரும்பினார். இந்நிலையில், இத்தாக்குதலை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

ஏற்கெனவே, இஸ்ரேல் – காசாவிற்கு இடையே போர் நிலவியபோது இஸ்ரேலுக்கு தேவையான போர் உதவிகள், ஆலோசனைகள் போன்றவற்றை அமெரிக்கா தொடர்ந்து வழங்கியது. இதேபோல தான், தற்போது ஈரான் நடத்திய தாக்குதலிலும் அமெரிக்கா எல்லவித உதவிகளையும் இஸ்ரேலுக்கு வழங்குவது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதன்காரணமாக, இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரோன்களை தடுத்து நிறுத்தும் பணியில் அமெரிக்கா இராணுவம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக 50 இற்கு மேற்பட்ட ஈரானிய ட்ரோன்கள் இஸ்ரேயலை நோக்கி ஏவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்கா கடற்படை கப்பல்கள் இத்தாக்குதலில் இஸ்ரேலுக்கு உதவி வருகிறது. இதனால், சிரியா , ஈரான் பகுதிகள் பாதிக்கப்படலாம் என்றும் கச்ச எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, இஸ்ரேலின் கப்பல் ஒன்று ஈரான் இராணுவத்தால் கைப்பற்ற நிலையில் போர் மேகங்கள் வளைக்குடாப் பகுதிகளை சூழந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை ஈரானை எதிரி நாடாகவும் , இஸ்ரேயலை தனது நட்பு நாடாகவும் கருதுவதால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles