காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவாக வாக்களித்துள்ளது.
அரபு நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு இலங்கை உட்பட 120 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 14 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உட்பட 45 நாடுகள் நடுநிலை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.










